ஆடிப்பெருக்கு திருநாளையொட்டி, தொடர் மழையால் நீரோட்டம் அதிகரித்துள்ள கோவை மாவட்டத்தின் பவானி, ஆழியாறு, நொய்யல் ஆறுகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வால்பாறை, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மழையின் காரணத்தினால் நொய்யல், பவானி உள்ளிட்ட ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவ்வாறான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 3) நடைபெறவுள்ள ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு பல்வேறு பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வது வழக்கம் என்றும் ஆட்சியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால், கோவை மாவட்டத்தில் செல்லும் பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தங்களது உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மழையின் காரணத்தினால் நொய்யல், பவானி உள்ளிட்ட ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவ்வாறான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 3) நடைபெறவுள்ள ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு பல்வேறு பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வது வழக்கம் என்றும் ஆட்சியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால், கோவை மாவட்டத்தில் செல்லும் பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தங்களது உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.