கோவை பீளமேடு: தொழிலதிபர் வீட்டில் 43 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

கோவை பீளமேடு பகுதியில் தொழிலதிபர் மோனிஷ் ராஜனின் வீட்டில் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது.


கோவை: கோவை பீளமேடு, சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வராஜின் மகன் மோனிஷ் ராஜன் (27) வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வரும் மோனிஷ் ராஜன், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தனது தாயாருடன் தாராபுரத்தில் உள்ள குலதெய்வக் கோவிலுக்குச் சென்றிருந்தார்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 43 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மோனிஷ் ராஜன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தமிழரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி திருடர்கள் இந்தக் கொள்ளையை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் பீளமேடு பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...