கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நாளை நடைபெறவுள்ள மேயர் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நாளை (06.08.2024) நடைபெறவுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, IAS மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், IAS ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 5) ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், காவல் துணை ஆணையர் (தெற்கு) சரவணகுமார், மாநகர துணை தலைமைப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர்கள் உஷாராணி (கணக்கு), மோகனசுந்தரி (நிர்வாகம்) உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், காவல் துணை ஆணையர் (தெற்கு) சரவணகுமார், மாநகர துணை தலைமைப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர்கள் உஷாராணி (கணக்கு), மோகனசுந்தரி (நிர்வாகம்) உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.