பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் அதிமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மாட்டு வியாபாரிகள் புகார்

பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் அதிமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மாட்டு வியாபாரிகள் சங்கம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. வெளியூர் வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.1,000 வரை கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி மாட்டுச் சந்தை வளாகத்தில் மாநில மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாட்டு வியாபாரிகள் மற்றும் மாடுகளை ஏற்றி வரும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த சில நாட்களாக சந்தைக்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிமுகவைச் சேர்ந்த சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதனைத் தடுத்து மாட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இந்த தீர்மானத்தின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். வெளியூரிலிருந்து மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையும், உள்ளூர் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை அதிமுகவைச் சேர்ந்த சிலர் வாகனங்களை தடுத்து நிறுத்தி பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பணம் தராவிட்டால் மாடுகளை கோசாலைக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டுவதாகவும் மாட்டு வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...