பாரதியார் பல்கலையில் சிறப்பு அரியர் தேர்வு: செப்டம்பர் 8-ல் நடைபெறும்

கோவை பாரதியார் பல்கலையில் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 8 அன்று சிறப்பு தேர்வு நடைபெறும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.



Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சிறப்பு அரியர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, ஒரு பாடத்தில் மட்டும் அரியர் உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 8 அன்று தேர்வு நடைபெறும்.

இந்த சிறப்பு அரியர் தேர்வில் பின்வரும் மாணவர்கள் பங்கேற்கலாம்:

- 2019-20ம் ஆண்டில் எம்.எஸ்சி. சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் படித்த மாணவர்கள்

- 2021-22ல் இளநிலை படிப்பு முடித்த மாணவர்கள்

- 2022-23 முதுநிலை படிப்பு முடித்த மாணவர்கள்

இந்த தேர்வு, மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை தொடரவும், வேலைவாய்ப்பு பெறவும் உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வாய்ப்பு ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே. செய்முறை, பிராஜக்ட் அல்லது வைவா தேர்வுகளில் அரியர் உள்ளவர்கள் இந்த சிறப்பு தேர்வில் பங்கேற்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தேர்வு நடைபெறும் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://b-u.ac.in/ -ஐ பார்வையிடலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...