திருப்பூரில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி: 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

திருப்பூரில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் செலிப்ரேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் ரோட்டரி கிளப் ஆஃப் செலிப்ரேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் பவன் குமார் மற்றும் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.



பேரணியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய சாலைகளின் வழியாக சென்றனர். பேரணி மங்கலம் சாலையில் உள்ள ரோட்டரி கிளப் அலுவலகத்தில் நிறைவடைந்தது.



இந்த நிகழ்ச்சியில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் செலிப்ரேஷன் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...