முகநூலில் மத அவதூறு கருத்து: இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது வழக்கு

கோவையில் முகநூலில் மதங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை கண்காணிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகர பகுதியில் முகநூல் பதிவுகளில் அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், சிங்காநல்லூர் காவல் துணை ஆய்வாளர் குறளரசன் முகநூல் கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது, கோவையைச் சேர்ந்த தமிழக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி ராமகிருஷ்ணன் என்பவர் இரு மதங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படும் வகையில் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தது கண்டறியப்பட்டது. இந்தப் பதிவுகள் இரு தரப்பினரிடையே பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும் என காவல்துறையினர் கருதினர்.

இது தொடர்பாக, சிங்காநல்லூர் காவல் துணை ஆய்வாளர் குறளரசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தமிழக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...