கோவையில் பருத்தி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் துவக்கம்

கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பு மற்றும் இந்திய பருத்தி சங்கம் சார்பில் 'பருத்தி - எதிர்காலத்திற்கான நிலையான இழை' என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது. பருத்தி தொழில் வளர்ச்சி குறித்து விவாதிக்க உள்ளனர்.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய பருத்தி கூட்டமைப்பு மற்றும் இந்திய பருத்தி சங்கம் சார்பில் 'பருத்தி - எதிர்காலத்திற்கான நிலையான இழை' (COTTON - The Sustainable Fibre Of The Future) என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது.



இந்த கருத்தரங்கத்தின் துவக்க விழா ஆகஸ்ட் 9 அன்று மாலை நடைபெற்றது. இந்திய பருத்தி கூட்டமைப்பின் துணைத் தலைவரும் கருத்தரங்கின் சேர்மனுமான நடராஜ் விழாவை துவக்கி வைத்தார்.



இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் விழாவிற்கு தலைமை வகித்தார்.



இந்த விழாவில் KG குரூப் சேர்மன் பாலகிருஷ்ணன் மற்றும் L.S. மில்ஸ் சேர்மன் மணிவண்ணன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் பேசுகையில், "இந்தியாவிற்கும் பருத்திக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. பருத்தி என்பது வணிகத்திற்கானதாக மட்டும் இல்லாமல் நமது கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது. பருத்தி உற்பத்திக்கு ஏதுவாக நம் நாட்டின் காலநிலை அமைந்துள்ளது. உலகச் சந்தையின் பருத்தி தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான வாய்ப்புகள் நம்மிடம் உள்ளது," என்றார்.

மேலும் அவர், "இந்த கருத்தரங்கம், இத்தகைய வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும் திட்டங்கள் தீட்டி நம் இலக்கை அடைவதற்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்," என்றும் கூறினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில், பல்வேறு ஆடை உற்பத்தி நிறுவனங்களும் வல்லுனர்களும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...