ஊதியூர் அருகே செங்கோடம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே செங்கோடம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம். வார்டு உறுப்பினர் வீட்டில் சாதி ரீதியாக அவதூறு பேசியதாக புகார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊதியூர் அருகே உள்ள செங்கோடம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்ய கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குட்கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன.

ஊராட்சியின் பெண் தலைவராக சரஸ்வதி பதவி வகிக்கிறார். துணை தலைவராக பாஜகவை சேர்ந்த பாலராமநாதன் உள்ளார். மேலும் 8 உறுப்பினர்கள் காங்கிரஸ், திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களாக உள்ளனர். துணைத்தலைவர் பாலராமநாதனுடன் லட்சுமி (காங்கிரஸ்), முத்து பிரபாவதி, தீபவதி, சரஸ்வதி (திமுக) ஆகியோர் ஒன்றிணைந்து ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஊராட்சியில் சுமார் ரூ.90 லட்சத்திற்கு மேல் நிதி இருப்பதாக தெரிகிறது. குடிநீர் பற்றாக்குறை அதிகரித்ததால் ஆழ்துளை கிணறு அமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், பழுதடைந்த சாலைகளை புனரமைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை செயல்படுத்த வார்டு உறுப்பினர்கள் தீர்மானங்களில் கையெழுத்திட வேண்டும். ஆனால் துணை தலைவர் உட்பட 5 பேர் கையெழுத்திட மறுத்துள்ளனர்.

இதனால் நேற்று பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து தலைவரிடம் நேரில் சென்று முறையிட்டனர். தலைவர், 5 பேர் கையெழுத்திட மறுப்பதால் கடந்த 2 மாதங்களாக ஊராட்சியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு கூட மாத சம்பளம் வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வார்டு உறுப்பினர் தீபா அவர்களின் வீட்டிற்கு ஆதிதிராவிட பொதுமக்கள் சென்று கையெழுத்திடுமாறு கோரினர். அப்போது தீபா, அவரது கணவர் சின்னசாமி, மகன் பரத்ராஜ் ஆகியோர் ஆதிதிராவிட மக்களை சாதி பெயர் சொல்லி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேதனை அடைந்த பொதுமக்கள் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊதியூர் பேருந்து நிறுத்தம் அருகே தற்காலிக சாமியானா அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் கேட்டு போராடி வரும் பொதுமக்களுக்கு பதிலளிக்க குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசியதற்கு வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும், திமுக நிர்வாகிகள் என்றால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். செய்தி துறை அமைச்சர் தொகுதியில் திமுக நிர்வாகிகளின் அராஜகம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...