சேரகுலவேளாளர் சமூகத்திற்கு சலுகைகள் வழங்க கோரிக்கை: தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் 75வது பேரவை கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டும் சலுகைகள் வழங்கப்படாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேரமான் பெருமாள் நாயனாரின் 94-வது குருபூஜை வழிபாட்டு விழா மற்றும் தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் 75 ஆவது பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் சேரகுல வேளாளர் சமூகத்தினர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேரகுல சமூக பெண்கள் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றினர். இந்த நிகழ்வை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



பேரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் N.S. மணி, "சேர குல வேளாளர் சங்கம் சார்பில் பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு நீதியரசர் மோகன் அவர்களின் பரிந்துரைப்படி இந்த சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால் இதுவரை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இதனால் இந்த சமூகத்தினர் பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக இச்சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

சேரகுலவேளாளர் சமூகத்திற்கு உரிய சலுகைகள் வழங்கப்படாததற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அரசாங்கம் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...