கோவையில் கொலை மிரட்டல் விடுத்த சலாவுதீன் அயூபி மீது நடவடிக்கை கோரி புகார்

கோவையில் கொலை மிரட்டல் விடுத்த சலாவுதீன் அயூபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தது. இந்த நபர் மீது ஏற்கனவே NIA வழக்கு நிலுவையில் உள்ளது.


Coimbatore: கோவை மாநகரில் கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட சலாவுதீன் அயூபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (12.8.2024) காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட இந்த புகார் மனுவில், சலாவுதீன் அயூபி என்பவர் "சங்கிகளை இந்த உலகத்தில் வாழ கூட தகுதி இல்லாதவர்களாக நாங்கள் ஆக்கி விடுவோம்" என்று கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த நபர் மீது ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பில் (NIA) வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கொலை மிரட்டல் வீடியோக்கள் சமூக ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இது போன்ற செயல்களை கடுமையாக கண்டித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையினர் இந்த புகாரை பெற்றுக் கொண்டு, விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற சமூக விரோத செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...