கோவையில் கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கோவை வேடப்பட்டியில் கண்ணாடி விரியன் பாம்பு கண்டுபிடிப்பு. இனப்பெருக்க காலத்தில் 30க்கும் மேற்பட்ட குட்டிகள் பிறக்கின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாம்பு பிடி நிபுணர் அறிவுறுத்தல்.



Coimbatore: கோவை வேடப்பட்டி பகுதியில் ஒரு வீட்டு வாசல் அருகே கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தன்னார்வ அமைப்பான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு உறுப்பினரும், பாம்பு பிடி வீரருமான விக்னேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விக்னேஷ் அந்த இடத்திற்கு சென்று, பாம்பை பாதுகாப்பான முறையில் மீட்டு, வனத்துறை அறிவுறுத்தலின்படி அதன் வாழ்விடத்தில் விட்டார். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கூறுகையில், "கண்ணாடி விரியன் பாம்புகள் மிகவும் விஷமுள்ளவை. இந்தியாவில் பாம்பு கடி மரணங்களில் பெரும்பாலானவை கண்ணாடி விரியன் பாம்புகளால் ஏற்படுகின்றன," என்றார்.



மேலும் அவர், "தற்போது கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம். ஒவ்வொரு பெண் பாம்பும் 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈனுகின்றன. இந்த குட்டிகள் பல்வேறு இடங்களில் உலா வருகின்றன. பார்ப்பதற்கு மலைப் பாம்பு போல் இருப்பதால், இது விஷமற்றது என நினைத்து யாரும் பிடிக்க முயலக் கூடாது," என எச்சரித்தார்.

"பாம்புகளைக் கண்டால் அடித்துக் கொல்லக்கூடாது. உடனடியாக வனத்துறைக்கு அல்லது பாம்பு பிடி வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு, அதன் வாழ்விடத்தில் விடுவார்கள்," என்று விக்னேஷ் அறிவுறுத்தினார்.

சமீபத்தில் கோவையில் கண்ணாடி விரியன் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் முரளி உயிரிழந்த சம்பவமும், ஒரு சிறுவன் பாம்பு கடியால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...