பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் அவசரமாக வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூஜை நடந்துகொண்டிருந்தபோது, பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தற்காலிகமாக கோயிலில் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பொள்ளாச்சிக்கு அருகில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். இக்கோயில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இப்பகுதி மக்கள் அதிகளவில் வழிபட வருவது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் பலரும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.



நேற்று இரவு ஆழியார் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலின் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கோயிலுக்குள் தரிசனம் செய்துகொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தற்போது பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோயிலில் சாமி தரிசனம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...