உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கம் 78-வது சுதந்திர தின விழாவை நேதாஜி மைதானத்தில் கொண்டாடியது. விழாவில் தேசியக் கொடியேற்றம், அணிவகுப்பு மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா நேதாஜி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் ராணுவ நல சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரிமா சங்க அறக்கட்டளை சேர்மன் நீலகண்டன் தேசியக் கொடியேற்றினார்.



முன்னதாக, நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் சுரேஷ் பிரகாஷ் உள்ளிட்டோர் அணிவகுப்பு நடத்தினர். நிகழ்ச்சியில் நேதாஜி நடைப்பயிற்சி நிர்வாகிகள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள்,



இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.





மேலும், ஓவியர் கனிமொழி என்ற மாணவி 78 சுதந்திர வீரர்களின் உருவப்படங்களை வரைந்து காட்சிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கத்தின் செயலாளர் சக்திவேல், பொருளாளர் சிவகுமார், நாயப்சுபேதார் நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...