பொள்ளாச்சியில் ஓடையகுளம் கிராம நீர் பயனாளர் சங்கத் தேர்தல்: வேட்புமனுக்கள் தாக்கல்

பொள்ளாச்சி அருகே ஆழியார் பாசன திட்டத்தின் ஓடையகுளம் கிராம நீர் பயனாளர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைவர் மற்றும் 4 ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 31 அன்று நடைபெறும்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பாசன திட்டத்தில் குளப்பத்துக்குளம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் மற்றும் ஓடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் 4 ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி சார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரிடம் காலை முதல் இந்த தேர்தலில் போட்டியிடும் விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.



தற்போது வரை தலைவர் பதவிக்கு வேட்டைக்காரன் புதூர் பகுதி சேர்ந்த விசாகபதி, ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிகளுக்கு வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த நீலகண்டன், ஓடையக்குளம் பகுதி சேர்ந்த சந்துரு, ஆனைமலை பகுதி சேர்ந்த ராஜமாணிக்கம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ஆழியார் அணை பாசன சங்கத் தலைவர் செந்தில் தலைமையில் வேட்புமனு செய்தனர்.



தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது. வரும் 31ம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று அன்று மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தலைவர் பதவிக்கு ஒருவரும், நான்கு ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் இவர்கள் போட்டி யின்றி தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...