பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவர்களுக்கு சிறுநீரக நோய் விழிப்புணர்வு

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 64 பள்ளி மாணவர்களுக்கு டயாலிசிஸ் பிரிவில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிறுநீரக நோய் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினர்.


கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள டயாலிசிஸ் பிரிவில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் பொள்ளாச்சி சாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 64 மாணவர்கள் பங்கேற்றனர்.

பொது மருத்துவ துறை மற்றும் டயாலிசிஸ் பிரிவு தலைவர் மருத்துவர் வனஜா, மாணவர்களுக்கு சிறுநீரகம் செயலிழப்பது குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விரிவாக விளக்கினார். சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை பற்றியும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.



சிறுநீரகம் செயலிழப்பதற்கான முக்கிய காரணங்களாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பது, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவற்றை மருத்துவர் வனஜா சுட்டிக்காட்டினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் கௌரி மற்றும் டயாலிசிஸ் டெக்னீசியன் அனுசுயா ஆகியோரும் உடனிருந்தனர்.

பயிற்சியின் முடிவில், பள்ளி மாணவர்கள் இந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...