கோவை மத்திபாளையம் ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹியம்மன் கோவிலில் சமத்துவ அன்னதானம்

கோவை மத்திபாளையம் ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹியம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலின் மூன்றாம் ஆண்டு விழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் கணபதி ஹோமம், பால்குடம் எடுத்தல், முளைப்பயிர் ஏற்படுத்தல், கும்மிப்பாட்டு நடனம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சமத்துவ அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.



கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான், மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் ஆலோசனைப்படி, ஜாதி மத பேதமின்றி பல்வேறு கோவில்களுக்கு திருப்பணிகளை செய்து வருகின்றார். அதன் தொடர்ச்சியாக, இந்த விழாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது.



அன்னதானத்தில் அரிசி சாதம், கதம்பம் சாம்பார், கதம்ப பொரியல், வந்த குளம்பு, ரசம், காய்கறி கூட்டு, அப்பளம், வடை, கோதுமை பாயாசம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த சமத்துவ அன்னதானத்தை பெண் பேரூராட்சி தலைவர்கள் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மனைவி, தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி, துணைத்தலைவர் மற்றும் நகரக் கழக செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



மேலும், கோயிலில் திருப்பணி ஆற்றும் பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகிகளுக்கும் காலை மற்றும் மாலை சிற்றுண்டியை ஆரோக்கிய ஜான் வழங்கினார். இக்கோவிலில் விநாயகர், பதஞ்சலி முனிவர், எல்லை ஜக்கம்மா, ராகு, கேது, சப்த கன்னிமார், தடிக்காரபோத்தி, சிவன், நந்தீஸ்வரர், உண்ணாமலை அம்மன், அகத்தியர், முருகன், சிங்க வாகன பீடம், ஸ்வர்ண காலபைரவர், பேச்சியம்மன், மயானகாளி, சுடலைமாடன் ஆகிய கடவுள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யப்படுகிறது. ராகு கேது பெயர்ச்சி காலங்களிலும், விநாயகர் சதுர்த்தி, அமாவாசை தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...