'அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி' - அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் கடும் விமர்சனம்

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். அண்ணாமலையை அரசியல் கோமாளி என்று குறிப்பிட்டார்.



கோவை: கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.



ராமச்சந்திரன் கூறுகையில், "திமுகவை பற்றி பேசினால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. கருணாநிதி நாணயம் எதற்கு வெளியிட்டார்கள் என்று கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எம்ஜிஆர்க்கு நாணயம் வெளியிட்டது மத்திய அரசுக்கு தான் பெருமை," என்றார்.

மேலும் அவர், "அண்ணாமலையிடம் யாராவது கேள்வி கேட்டால் அவருக்கு பதற்றம் வந்து விடுகிறது. பயப்பட கூடியவர்கள் தான் பதற்றம் அடைவார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் பொழுது எடப்பாடியார், எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் அண்ணா அண்ணா என்று கெஞ்சிக் கொண்டிருந்தவர் தான் அண்ணாமலை," என்று குறிப்பிட்டார்.

Go Back Modi என்று திமுக தொடர்ந்து செய்து வந்ததை சுட்டிக்காட்டிய ராமச்சந்திரன், "திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரசை சேர்ந்த ஒருவரை எதற்காக அண்ணாமலை ரகசியமாக சந்தித்தார்? DMK Files என்று வெளியிட்டுப் பேசிய அண்ணாமலை வெட்கமே இல்லாமல் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ஏன் கலந்து கொண்டார்?" என்று கேள்வி எழுப்பினார்.



அண்ணாமலையின் விவசாயி பிம்பத்தை கேள்விக்குள்ளாக்கிய ராமச்சந்திரன், "அண்ணாமலையே விவசாய நிலத்தை விற்று கொண்டு இருக்கிறார். ஆனால் தான் விவசாயி மகன் என்று கூறி கொள்கிறார். அதிமுக ஊழல் கட்சி என்று அண்ணாமலை கூறுகிறாரென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பொழுது அது தெரியவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

"20 ஆயிரம் புத்தகம் படித்தவரிடம் அனைத்து கேள்விகளுக்கும் விடையிருக்க வேண்டும். அண்ணாமலை கட்சித் தலைவர் இல்லை, YouTube Influencer," என்று ராமச்சந்திரன் சாடினார்.

பின்னர் அண்ணாமலை, பாஜக, திராவிட கட்சிகள் பற்றியும் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் புரிய வேண்டும் எனக் கூறி ஹிந்தியில் பேசினார். "முடிந்தால் பாஜகவில் உள்ளவர்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிமுகவிலிருந்து யாரும் வரமாட்டார்கள்," என்றும் தெரிவித்தார்.

முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமச்சந்திரன், "இதற்கு முன்பு முதல்வர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததில், முதலீடு இங்கு வந்திருக்கிறதா? வேலைவாய்ப்பு உருவாகி இருக்கிறதா? இதற்கெல்லாம் முதலில் பதில் கொடுத்துவிட்டு செல்லட்டும். இல்லையென்றால் போய் வருவதற்கான அரசாங்க பணம்தான் வீண்," என்று கூறினார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...