கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கோவையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி கோவையில் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினர்.



கோவை: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவையில் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்க கோவைக் கோட்ட மகளிர் துணைக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், பணியிடங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வலியுறுத்தியும் இவர்கள் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தின் போது, பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பினை உத்திரவாதப்படுத்திடவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திடவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோரிக்கைகள் முழங்கப்பட்டன.



இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...