தமிழக சினிமாவில் பாலியல் புகார்கள் இல்லை; வந்தால் நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன்

திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தொடங்கி வைத்தார். கேரளா சினிமாவில் நடந்தது போல் தமிழகத்தில் பாலியல் புகார்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, 7 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிறித்துராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார்.



இந்த வாகனங்கள் மூலம் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திடவும் கால்நடைகளை நன்கு பராமரித்து மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அண்மையில் தமிழக முதல்வரால் 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. அதன்படி திருப்பூர் மாவட்டத்திற்கு 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியில் இருப்பர். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தற்பொழுது அங்கு பரபரப்பாகி வரும் சூழலில், தமிழகத்தில் தற்பொழுது வரை அது போன்று எந்தவித புகார் வரவில்லை. அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறித்து பேசிய அமைச்சர், "தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு தொழிற்சாலையும் வெளி மாநிலத்திற்கு செல்லவில்லை. தமிழகத்திலேயே தான் தொடர்ந்து இயங்கி வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து கூட தமிழகத்திற்கு வந்து தொழில் செய்கின்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தியது மூலம் தொழில் தொடங்க ஆர்வமுடன் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...