திருமாவளவனின் 62வது பிறந்தநாள்: மடத்துக்குளம் அருகே வி.சி.க. கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் வி.சி.க. தலைவர் திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் வி.சி.க தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வி.சி.க மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதும், தேர்தல் அரசியல் பாதையில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கொண்டாடப்பட்டன.

கணியூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. பொறியாளர் பழ.இராசசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



வி.சி.க.வின் முதன்மை செயலாளர் ஏ.சி. பாவரசு, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, தி.மு.க திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன், நேதாஜி பேரவை நிறுவனத் தலைவர் இல.கோபிநாத், ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜல்லிப்பட்டி மா.முருகன், மாநிலத் துணைச்செயலாளர் கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை அ.கிப்டன் டேவிட் பால் ஆகியோர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும், இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், வி.சி.க உடுமலை நகர பொறுப்பாளர் பொன். சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழா திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடுவதோடு, வி.சி.க.வின் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டியது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...