கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கா் ஜிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கா் ஜிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கா் ஜிவாலுடன், காவல்துறை மேற்பார்வை இயக்குநர் (ஐஜி) செந்தில் குமார் மற்றும் காவல்துறை துணை தலைமை இயக்குநர் (டிஐஜி) சரவண சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா, மற்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.