உடுமலை நகர பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை முகாம்: 500க்கும் மேற்பட்ட படிவங்கள் வழங்கப்பட்டன

உடுமலை நகர பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் சார்பு அணி தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரிலும், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தலின் படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.



உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகர பொதுச்செயலாளர்கள் தம்பிதுரை மற்றும் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் உடுமலை நகர மண்டல பொறுப்பாளரும் மாவட்ட பொதுச் செயலாளருமான வடுகநாதன், மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாநில விவசாய அணி செயலாளருமான மௌனகுருசாமி ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.



இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் உடுமலை நகர பாஜக பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் சார்பு அணி தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.



உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள உடுமலை நகர பொறுப்பாளர்களான உமா குப்புசாமி, நாச்சியப்பன், குருசாமி, பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.



இந்த முக்கிய நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பார்வையாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, நகர மகளிர் அணி தலைவர் ரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலகுரு, நகர செயலாளர்கள் ஹரிகரன், முருகேசன், நகர துணைத்தலைவர் செல்வி, நகர மகளிர் அணி பொருளாளர் விஜயலட்சுமி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...