கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை கணுவாய் தடுப்பணையை புனரமைக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். இப்பணி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.



கோவை: கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாய் பகுதியில் அமைந்துள்ள கணுவாய் தடுப்பணையை புனரமைப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது. கெளசிகா நீர்கரங்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார்.



இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், கோவை நீர்வளத்துறை பாசன உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அம்சராஜ் மற்றும் பன்னிமடை ஊராட்சி தலைவர் பி.எஸ்.எம். ரத்தினம் மருதாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் பூமி பூஜை செய்து விழாவை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கணுவாய் தடுப்பணையை புனரமைக்க கெளசிகா நீர்கரங்கள் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில் பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.

இந்த குழுவினர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் கணுவாய் தடுப்பணையை தூர்வாரும் பணியில் ஈடுபடுவர். இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வரும் மழைநீர் கணுவாய் தடுப்பணை வழியாக சின்ன வேடம்பட்டி ஏரிக்கு மண்ணரிப்பின்றி செல்ல முடியும்.

இந்த முயற்சியால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...