கோவையில் மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடு

கோவையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இணைந்து மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, ஓவியம் மற்றும் ஒராள் நாடகப் போட்டிகளை நடத்தின. பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் மாணவ, மாணவிகளின் இலக்கியத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் கவிதை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.



இந்த நிகழ்வில் கவிதை, ஓவியம், பேச்சு ஆகிய போட்டிகளுடன், மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒராள் நாடகமும் நடத்தப்பட்டது. கவிதைப் போட்டியில் "மெல்லத்தமிழ் இனி?", "இன்ஸ்டா அடிமைகள்", "இயற்கை பேரிடர்கள் படிப்பினை என்ன?", "சமத்துவமும் சமூக நீதியும்" போன்ற தலைப்புகள் வழங்கப்பட்டன.

பேச்சுப் போட்டியில் "பழங்குடி மனித குலத்தின் மூத்த குடி", "நம் கல்வி நம் உரிமை எல்லோரும் சமம்தானே டீச்சர்" போன்ற தலைப்புகள் இடம்பெற்றன.



தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி இந்தப் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.

பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் தனித்தனி அரங்குகளில் நடைபெற்ற போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



குறிப்பாக ஒராள் நாடகப் பிரிவில், மாணவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை தத்ரூப நாடகங்களாக நடித்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இந்த இலக்கியப் போட்டிகள் இளம் தலைமுறை மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதோடு, சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...