மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை முட்டி வீசிய மாடு: வைரலாகும் காணொளி

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை மாடு முட்டி வீசியது. இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதி சாலைகளில் கால்நடைகள் சுதந்திரமாக உலவி வருவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலை சங்கர் நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மாடு முட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த இந்த சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...