யார் அரசியலுக்கு வந்தாலும் கவலையில்லை, மக்கள் எங்கள் பக்கம் - அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார். திமுகவின் நலத்திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.



Coimbatore: திருப்பூர் தெற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக பொதுகுழு உறுப்பினர்கள் கூட்டம் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு களப்பணி ஆற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கினாலும் எங்களுக்கு ஆட்சேபனையும் இல்லை, வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் திமுகவிற்கு கூடுதலான வாக்குகள் கிடைத்து வருகிறது," என்றார்.

மேலும் அவர், "கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுமக்கள், குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் அன்பைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். எனவே, எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...