இறுதிச்சடங்கு கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்

கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில் பட்டா வழங்கப்பட்ட பெண்கள், வீடு கட்ட முயற்சிக்கும்போது எதிர்ப்பு மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டதாக கூறி, இறுதிச்சடங்கு கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் சுமார் 12 மணியளவில் வித்தியாசமான காட்சி ஒன்று அரங்கேறியது. இறுதிச்சடங்கு கோலத்தில் சில பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில் உள்ள தெலுங்குபாளையத்தில் சுமார் 100 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2000ம் ஆண்டில் பட்டா ரத்து செய்யப்பட்ட சில நபர்கள் அங்கேயே தொடர்ந்து வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



புதிதாக பட்டா பெற்றவர்கள் அங்கு வீடு கட்டி குடியேற முயற்சிக்கும் போது, ஏற்கனவே அங்கு வசிப்பவர்கள் இடையூறு விளைவிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெண்கள் சிலர் இறுதிச்சடங்கில் அணியும் வெள்ளை ஆடையில், தலைக்கு மேல் துணியை பிடித்தவாறு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும், இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், காவல்துறையில் புகார் அளிக்குமாறு கூறுவதாகவும், காவல்துறையில் புகார் அளிக்க சென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமே கூறுமாறு திருப்பி அனுப்புவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...