கோவை கொடிசியாவில் 'ராமேட் இந்தியா 2024' பேப்பர் மற்றும் பேக்கேஜிங் கண்காட்சி: செப்டம்பர் 10 முதல் 12 வரை

கோவை கொடிசியாவில் செப்டம்பர் 10 முதல் 12 வரை நடைபெறும் 'ராமேட் இந்தியா 2024' கண்காட்சியில் பேப்பர் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும். 150 கோடி ரூபாய் வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற செப்டம்பர் 10 முதல் 12 வரை "3P Expo"வின் ராமேட் இந்தியா 2024 கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான இந்த கண்காட்சியில், பேப்பர் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான காட்சிப்படுத்தல்கள் இடம்பெறும்.

இந்த கண்காட்சியின் போஸ்டர் வெளியீட்டு விழா கோவை கொடிசியா அரங்கில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்றது. இதில் "3P Expo" தலைவர் ஜெகதீசன், கொடிசியா தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் சிறப்பம்சங்களாக, லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுசிங் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங் துறை சார்ந்த அரங்குகள், 55 காட்சி அரங்குகள், 20க்கும் மேற்பட்ட நேரடி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு ஆகியவை இடம்பெறும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கண்காட்சியின் மூலம் 150 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் தொழில்நுட்பங்களை எடுத்துரைக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கோவா, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். பார்வையாளர்கள் அனைவருக்கும் நுழைவு இலவசம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...