கோவையில் வக்கீல் மகளைக் கடத்த முயன்ற இருவர் கைது

கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள ஓட்டலில் வக்கீல் குடும்பத்தினர் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இரு நபர்கள் வக்கீலின் மகளைக் கடத்த முயன்றனர். பொதுமக்கள் உதவியுடன் சம்பவ இடத்திலேயே இருவரும் பிடிபட்டனர்.


Coimbatore: கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வக்கீல் பிரவீன் குமார் (41), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள ஓட்டலில் உணவருந்தச் சென்றனர். உணவருந்திய பின், பிரவீன் குமார் ஓட்டலுக்கு வெளியே ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியும் மகளும் கழிவறைக்குச் சென்றனர்.

அப்போது, அங்கு வந்த இரு நபர்கள் பிரவீன் குமாரின் மகளைக் கடத்த முயன்றனர். இதைக் கண்ட அவரது மனைவி உடனடியாக சத்தமிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த பிரவீன் குமார், பொதுமக்களின் உதவியுடன் அந்த இருவரையும் பிடித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் தலைமையிலான காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கோவை புதூர் குளத்துப்பாளையம் அம்மாவாசை கவுண்டர் வீதியைச் சேர்ந்த மணிவண்ணன் (30) மற்றும் பத்மநாபன் (30) என்பது தெரியவந்தது.

தற்போது இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...