கோவை டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் 'போலீஸ் அக்கா' திட்டம் தொடக்கம்

கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' திட்டம் செப்டம்பர் 4 அன்று தொடங்கப்பட்டது. மாணவிகளின் பாதுகாப்பிற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செப்டம்பர் 4 அன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் இயக்குநர் பெ.இரா.முத்துசாமி வரவேற்புரை ஆற்றினார். டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார்.

'போலீஸ் அக்கா' திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மாநகரக் காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், "கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை பெற்றோரிடமோ, தோழிகளிடமோ கூட பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் சில சமயங்களில் அவர்கள் விபரீதமான முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்கள். சமூக வலைதளங்களை எப்படி பாதுகாப்புடன் பயன்படுத்துவது என்பதை மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் சிறிய பிரச்னைகளை கூட போலீஸ் அக்காவிடம் தெரிவித்தால் அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கு ஆலோசனை வழங்குவார்" என்று தெரிவித்தார்.

கோவை மாநகர துணை காவல் ஆணையர் வி.சுஹாசினி பேசுகையில், "சமூகத்தில் தற்போது ஆண், பெண் பாகுபாடின்றி பழக வேண்டிய சமத்துவமான சூழல் நிகழ்கிறது. அச்சூழலில் பெண்கள் தங்களுக்கென ஒரு எல்லைக் கோட்டை வரைந்து அதற்குள் பழக வேண்டும். அந்த எல்லைக் கோட்டை மீறும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.

இந்த திட்டம் மூலம் மாணவிகள் தங்களின் பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளவும், அவற்றிற்கான தீர்வுகளை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...