கோவை கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா 'New Bie'24' செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர், பத்திரிகையாளர் வழக்கறிஞர் K.சுமதி கலந்து கொண்டார்.
கோவை: கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில், 'New Bie'24' என்ற நிகழ்ச்சி செப்டம்பர் 05 ஆம் தேதி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரா.வசந்தகுமார் தலைமை தாங்கினார். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் முனைவர் ச.பத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.மணிமாறன் தலைமையுரை ஆற்றினார். முதல்வருடன், துணை முதல்வர் முனைவர் த.பானு, ஆசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டு புதிய மாணவர்களை வரவேற்றனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர், பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் K.சுமதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். அவரது உரையில் "ஆசிரியர் பணியே அறப்பணி" என்ற கருத்தை வலியுறுத்தினார். மேலும், அந்த அறப்பணியின் சிறப்புகளையும், இன்றைய மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்.

K.சுமதி தனது உரையில் மொழியறிவு மற்றும் மொழி ஆளுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதோடு, 'உன்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை சிந்தனைகளை மாணவர்களிடம் விதைத்தார். இந்த ஊக்கமூட்டும் உரை மாணவர்களுக்கு புதிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.
நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன், மாணவர்கள் புதிய உற்சாகத்துடனும் நோக்கத்துடனும், கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்கத் தயாராகினர். இந்த இளம் மனங்களை வளர்ப்பதற்கும், அவர்களின் கல்வி மற்றும் தொழில் இலக்குகளை அடைய உதவுவதற்கும் நிறுவனம் உறுதியுடன் உள்ளதாக தெரிவித்தது.
நிகழ்ச்சிக்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரா.வசந்தகுமார் தலைமை தாங்கினார். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் முனைவர் ச.பத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.மணிமாறன் தலைமையுரை ஆற்றினார். முதல்வருடன், துணை முதல்வர் முனைவர் த.பானு, ஆசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டு புதிய மாணவர்களை வரவேற்றனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர், பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் K.சுமதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். அவரது உரையில் "ஆசிரியர் பணியே அறப்பணி" என்ற கருத்தை வலியுறுத்தினார். மேலும், அந்த அறப்பணியின் சிறப்புகளையும், இன்றைய மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்.
K.சுமதி தனது உரையில் மொழியறிவு மற்றும் மொழி ஆளுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதோடு, 'உன்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை சிந்தனைகளை மாணவர்களிடம் விதைத்தார். இந்த ஊக்கமூட்டும் உரை மாணவர்களுக்கு புதிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.
நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன், மாணவர்கள் புதிய உற்சாகத்துடனும் நோக்கத்துடனும், கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்கத் தயாராகினர். இந்த இளம் மனங்களை வளர்ப்பதற்கும், அவர்களின் கல்வி மற்றும் தொழில் இலக்குகளை அடைய உதவுவதற்கும் நிறுவனம் உறுதியுடன் உள்ளதாக தெரிவித்தது.