கோவை சுண்டக்காமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு துணை மேயர் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்

கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் துணை மேயர் வெற்றி செல்வன் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்வு தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


கோவை: கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள சுண்டக்காமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்புத் திட்டமான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் செப்டம்பர் 4 அன்று துவக்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சரின் பள்ளி மாணவ, மாணவியருக்கான இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர், 89வது வார்டு கவுன்சிலர் முருகேசன், கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...