கோவை வழியாக கோவா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கோவை மற்றும் திருப்பூர் வழியாக மட்கான்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பல முக்கிய நகரங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவா அருகே உள்ள மட்கான் மற்றும் வேளாங்கண்ணி இடையே கோவை மற்றும் திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை குறித்த விவரங்களை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மட்கான் ரயில் நிலையத்திலிருந்து செப்டம்பர் 6 அன்று நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும் மட்கான்-வேளாங்கண்ணி ரயில் (எண்: 01007) மறுநாள் நண்பகல் 12.25 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

திரும்பும் வழியில், வேளாங்கண்ணியிலிருந்து செப்டம்பர் 7 அன்று இரவு 11.55 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி-மட்கான் சிறப்பு ரயில் (எண்: 01008) மறுநாள் இரவு 11 மணிக்கு மட்கான் நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஷொரணூர், திரூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்தி பயனடையலாம் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...