கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா நடைபெற்றது. தொழில்துறை நிபுணர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.


Coimbatore: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு சிறப்புரை ஆற்றினார்.

முதல் நாள் விழாவில், கோவை அல்ஸ்டாம் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு குழு தலைவர் சாயா பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், தொழில்நுட்ப மாற்றத்தை மாணவர்கள் வரவேற்கும் பொருட்டு கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிகுதி வைத்திருக்க வேண்டும் எனவும், இந்த தொழில்நுட்ப உலகில் மிகவும் முக்கியமான அடிப்படைகளை வலுப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தினார். மேலும், வளாகத்தில் கிடைக்கும் ஏராளமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

இரண்டாம் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரத்தின் எம்பெடெட் - குரு எல்.எல்.சி. நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷ் ஜானகிராமன் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், மாணவர்கள் எப்போதும் நேர்காணலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மகாபாரதத்தில் இருந்து அனுமானங்களை மேற்கோள் காட்டி, உடல், ஆன்மா மற்றும் மனதில் செயலில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இறுதியாக, தற்போதைய போக்குகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் படிக்கும் பழக்கத்தை வளர்க்க மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

கௌரவ விருந்தினர்களாக, இக்கல்லூரியில் 1996-2000 கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள், கோவை காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு குழு இயக்குனர் சக்திவேல் ராஜசேகர், பெங்களூரு இன்ஜினியரிங் ஆர்ம் எம்பெடட் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குநர் பழனியப்பன் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் மாணவர்கள் எவ்வாறு தங்களின் நான்கு வருட பட்டப்படிப்பை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் எனவும், பல்வேறு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், தற்போது பயின்று கொண்டிருக்கும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழும் பரிசும் வழங்கினர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...