விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள்: இந்து முன்னணி எச்சரிக்கை

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு. இதேநிலை தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 300 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 4 அடி முதல் 12 அடி உயரம் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.



காலை முதல் சிலைகளுக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு, சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்து முன்னணி சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்குமார், "எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.

"விநாயகர் சதுர்த்தி என்பது இந்து முன்னணி விழா அல்ல. பொங்கல், தீபாவளி போன்று அது ஒரு மக்கள் விழாவாக மாறிவிட்டது. எனவே தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இனிவரும் காலங்களிலாவது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சிலை வைக்கவும் வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்" என இந்து முன்னணி எச்சரித்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...