கோவை பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட்டம்

கோவை துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்து அமைப்புகள் சார்பாக மகாராஜா விநாயகர், சிங்க விநாயகர், அன்னபறவை விநாயகர், மாப்பிள்ளை விநாயகர், மயில் விநாயகர், நீர் வீழ்ச்சி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் ஒரு பகுதியாக, கோவையின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ரங்கம்மாள் காலனி, வெள்ளகிணர், உருமாண்டம்பாளையம், தடாகம், கணுவாய், பன்னிமடை, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக விழா கொண்டாடப்பட்டது.



நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் ராஜஸ்தானி அரண்மனை போன்ற அலங்கார அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வாராகி மணிகண்ட சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, தக்காளி சாதம், புளி சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் அன்னதானமாக வழங்கப்பட்டன. ஹிந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா, பாரத் சேனா, விவேகானந்தர் இளைஞர் பேரவை, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்த கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...