உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழா: பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கணபதி ஹோமம், அபிஷேகம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் அரிமா லோகநாதன் தலைமை வகித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக, கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, திருமறை திருப்புகழ் நாமவளி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சிக்கு உடுமலை மக்கள் பேரவை தலைவர் யு.கே.பி முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.



டாக்டர் சம்பத்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில், பாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...