கோவை பீளமேடு அருகே வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

கோவை பீளமேடு அருகே போலீசார் வாகன சோதனையின் போது 458 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.


கோவை: கோவை பீளமேடு அருகே வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் செப்டம்பர் 6 அன்று பீளமேடு, காந்தி மாநகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 458 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த குட்கா கடத்தலில் ஈடுபட்ட வி.கே. ரோடு, ஏ.டி. காலனியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 34) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்ந்து செயல்பட்ட முகேஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளார்.

கைதான நபர்களிடமிருந்து ஒரு வேன், ஒரு மோபெட் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...