பொள்ளாச்சி திஷா இன்டர்னேஷனல் பள்ளியில் தேசிய அளவிலான டேக் வின்டோ போட்டி: 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே உள்ள திஷா இன்டர்னேஷனல் மேல்நிலைப்பள்ளியில் CISCE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான டேக் வின்டோ போட்டிகள் நடைபெற்றன. 13 மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் செயல்பட்டு வரும் திஷா இன்டர்னேஷனல் மேல்நிலைப்பள்ளியில் CISCE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான டேக் வின்டோ போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் 14, 17, 19 வயதினருக்கு தனித்தனியாக 69 பிரிவுகளில் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன. முதல் முறையாக சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் செயல்படுத்தப்படும் PSS முறையில் சென்சார் மூலம் பதிவு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.



இப்போட்டிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெறும் மாணவ, மாணவிகள் மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து டேக் வின்டோ பயிற்சியாளர் கோதண்டன் கூறுகையில், "இப்போட்டிகள் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் தன்னம்பிக்கையையும் வளர்க்கின்றன. சர்வதேச தரத்திலான போட்டிகளில் பங்கேற்பதற்கு இது ஒரு சிறந்த தளமாக அமைகிறது," என்றார்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...