யூடியூப் சேனல்களை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

கோவையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்தார். யூடியூப் சேனல்களை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.





இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



மலிவு விலை மருந்துகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், மார்கெட் விலையை விட குறைவான விலைக்கு மருந்துகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் இது பயனுள்ள திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் PM-SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான ஒப்புதல் குறித்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை அனைத்து மக்களின் கருத்துகளையும் கேட்டு உருவாக்கப்பட்டதாகவும், ஆரம்பக் கல்வியில் தாய்மொழி கல்வியை வலியுறுத்துவதே இதன் நோக்கம் என்றும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்துவோம் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்த முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்கள் குறித்து பேசிய அமைச்சர், "மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் செய்தியாளர்களாக இருக்கின்றார்கள். யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம், எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற சூழல் இருந்து வருகிறது. இதனை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர இருக்கிறது" என்றார்.

யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அமைச்சர், தேசத்திற்கு எதிராக செயல்பட்ட 69 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர், விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும், ஊடகங்களே இதனை பெரிதுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...