கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பகல் நேரத்தில் புகுந்து செல்போன் திருடிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: கோவை பீளமேடு பகுதியில் லவ்லி நெஸ்ட்மென்ஸ் எனும் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (22) என்பவரின் செல்போன் திருட்டு போனது தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று பிரவீன் குமார் பகலில் விடுதி அறையில் உறங்கியுள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது தனது செல்போன் காணாமல் போனதைக் கண்டறிந்தார். விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர் மெதுவாக நடந்து வந்து அறைக்குள் சென்று செல்போனை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரவீன் குமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.
கோவை மாநகரத்தில் ஏற்கனவே இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது பகல் நேரத்தில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து திருடும் இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சம்பவத்தன்று பிரவீன் குமார் பகலில் விடுதி அறையில் உறங்கியுள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது தனது செல்போன் காணாமல் போனதைக் கண்டறிந்தார். விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர் மெதுவாக நடந்து வந்து அறைக்குள் சென்று செல்போனை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரவீன் குமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.
கோவை மாநகரத்தில் ஏற்கனவே இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது பகல் நேரத்தில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து திருடும் இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.