கோவை துடியலூரில் 351 விநாயகர் சிலைகள் கரைப்பு; பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சர்ச்சை பேச்சு

கோவை துடியலூரில் 351 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. காவல்துறையில் இந்து விரோத சக்திகள் ஊடுருவியுள்ளதாக இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.



Coimbatore: கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 351 விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குட்டையில் கரைக்கப்பட்டன. இதற்கு முன்னதாக, இந்து முன்னணி சார்பாக விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உருவை பாலன் தலைமை தாங்கினார். நந்தகுமார், தியாகராஜன், ஜெய்கார்த்திக், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா பேசும்போது, "தமிழ்நாட்டில் மத நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்கள், பள்ளிக்கூடத்தில் பேசியதை கூட பெரிய அளவில் எடுத்துக் கொண்டு, அவரை கைது செய்வதற்கு 20க்கும் மேற்பட்ட போலீசாரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைப்பது ஒரு தவறான முன்னுதாரணமாகும்" என்றார்.



மேலும் அவர், "பிரதமரை பற்றி தவறாக பேசிய அமைச்சர் உட்பட பலர் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தந்தை பெரியார் தவறான வழிகாட்டுதலை தமிழ்நாட்டில் கொடுத்திருக்கிறார். போலீஸ் துறையில் பெரிய பொறுப்பில் இருக்கின்ற அதிகாரி கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொல்லி வருகிறார். இந்து விரோத சக்திகள் காவல் துறையில் உள்ளே போயிருக்கிறதோ என்று தோன்றுகிறது" என்று குற்றம்சாட்டினார்.



எச்.ராஜா மேலும் கூறுகையில், "இந்த பகுதியில் 350க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதை முறையாக அனுமதிக்காமல் அவர்களை காலம் கடத்தி அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது. திருச்சியில் ஒரு பகுதியில் பிற மதத்தை சேர்ந்தவர் கற்பழிப்பு சம்பவத்தில் கூட ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை" என்றார்.

இறுதியாக அவர், "பக்தி என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்து கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்க நெறிமுறைகள் இந்து மதத்தில் அதிகமாக உள்ளது. அதை அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...