சேலம் ரயில்வே கோட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கோவை: தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஈட்டுதலில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் 1.02 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் சேலம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 44.9 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.127 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மூன்றாவது இடத்தில் ஈரோடு ரயில் நிலையம் உள்ளது. இங்கு 43 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.111 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
நான்காவது இடத்தில் திருப்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 39 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் கரூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 9.69 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.18 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் 1.02 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் சேலம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 44.9 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.127 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மூன்றாவது இடத்தில் ஈரோடு ரயில் நிலையம் உள்ளது. இங்கு 43 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.111 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
நான்காவது இடத்தில் திருப்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 39 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் கரூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 9.69 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.18 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.