கோவையில் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா: 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 11 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படுவதாகவும், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் பாராட்டினார்.

மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் வருகை மற்றும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து வருவது பெருமைக்குரியது என்றார். மேலும், ஆசிரியர்களை கௌரவிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் மாநகராட்சி ஆணையாளரும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் K. சிவகுமார், மண்டலத் தலைவர்கள் K.A. தெய்வயானை தமிழ்மறை, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மண்டல உதவி ஆணையர்கள் சந்தியா, செந்தில்குமரன், ஸ்ரீதேவி, மாநகர கல்வி அலுவலர் R. குணசேகரன், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...