சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை

கோவை சிங்காநல்லூர் அருகே வரதராஜபுரம் பாலாஜி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 32 வயது வாலிபரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பாலாஜி நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 32 வயது வாலிபரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (32) என்பவர் கோவை சுந்தராபுரம் தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரம் பாலாஜி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக கிருஷ்ணகுமார் வீட்டை விட்டு வெளியே வராததால், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் செப்டம்பர் 12 ஆம் தேதி காலை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது கிருஷ்ணகுமார் இறந்த நிலையில் கிடந்தார். அவர் இறந்து சுமார் இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகுமாரின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதால், போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பழனியில் உள்ள கிருஷ்ணகுமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிங்காநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...