மேட்டுப்பாளையம் அருகே ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஏகே செல்வராஜ்

மேட்டுப்பாளையம் அருகே இலுப்பநத்தம் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் திறந்து வைத்தார். குழந்தைகளுக்கான வசதிகளுடன் கூடிய இந்த மையம் பெற்றோர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.



Coimbatore: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் முழுவதுமாக முடிவுற்ற நிலையில், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் புதிய பாத்திரத்தில் பால் பொங்கல் வைத்து அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது பணிகளைத் துவக்கினர். மேலும், அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களை வைத்து குத்து விளக்கும் ஏற்றப்பட்டது.



புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கண்களைக் கவரும் வகையிலும், கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் விலங்குகள் மற்றும் கார்ட்டூன் படங்கள் சுவர்களில் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளன. இது குழந்தைகளுக்கு ஒரு மகிழ்ச்சியான கற்றல் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இலுப்பநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய அங்கன்வாடி மையம் அப்பகுதி குழந்தைகளின் ஆரம்பகால கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...