மடத்துக்குளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் - மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து உரையாற்றினார். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்டச் செயலாளர்கள் திருப்பதி மற்றும் காளிமுத்து ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து உரையாற்றினார். பின்னர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்துள்ள மறுசீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

உடுமலை கோட்டாட்சியர் கண்டிசன் நிலங்களுக்கு NOC வழங்குவதை தமிழ் புலிகள் கட்சி வன்மையாக கண்டித்தது. மேலும், உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் போலி பத்திரங்களை தயாரித்து வழங்குவதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 28, 2024 அன்று கோவையில் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்த திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு விழா நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், Dharapuram ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...