கோவை சிங்காநல்லூர் தொகுதியில் ஆணையங்காடு சாலையில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதி 61-வது வார்டுக்குட்பட்ட ஆணையங்காடு சாலையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் இன்று (செப்டம்பர் 13) திறந்து வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.8 லட்சம் செலவில் இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மையம் பகுதியில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பக் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சிவகுமார், வட்டக் கழக செயலாளர்கள் பாலமுருகன், சசிகுமார், பக்ருதீன், மாவட்ட துணை செயலாளர் பீளமேடு துரைசாமி, கைத்தறி முத்துசாமி, சிங்கைபாலன், எஸ் ஆர் ரவி, சிங்கை வசந்தி, ஜெயகோபால், குமரேசன், நல்லதம்பி மற்றும் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதி பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.8 லட்சம் செலவில் இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மையம் பகுதியில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பக் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சிவகுமார், வட்டக் கழக செயலாளர்கள் பாலமுருகன், சசிகுமார், பக்ருதீன், மாவட்ட துணை செயலாளர் பீளமேடு துரைசாமி, கைத்தறி முத்துசாமி, சிங்கைபாலன், எஸ் ஆர் ரவி, சிங்கை வசந்தி, ஜெயகோபால், குமரேசன், நல்லதம்பி மற்றும் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதி பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.