கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 1844 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.40 கோடி இழப்பீடு வழங்கல்

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 1844 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.40 கோடியே 17 லட்சத்து 8 ஆயிரத்து 503 இழப்பீடு வழங்கப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்றார்.



கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஏற்பாட்டில், தேசிய மக்கள் நீதிமன்றம் 14.09.2024 அன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மாண்புமிகு G.விஜயா அவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு தொடங்கியது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான நீதியரசர் D.கிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதிமன்றப்பதிவாளர் (பொது) M.ஜோதிராமன், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் A.நசீர் அஹமத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 1844 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த தீர்வுத் தொகை ரூ.40 கோடியே 17 லட்சத்து 8 ஆயிரத்து 503 ஆகும். 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த 89 வழக்குகளும் இதில் தீர்க்கப்பட்டன. மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள் மற்றும் குடும்பப் பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக, நீதியரசர் D.கிருஷ்ணகுமார் அவர்கள், மோட்டார் வாகன விபத்தில் தனது மனைவியை இழந்த மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.58 லட்சம் இழப்பீட்டுத் தொகையை காசோலையாக வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், அன்னூர் மற்றும் மதுக்கரை ஆகிய இடங்களிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. மொத்தம் 27 அமர்வுகள் மூலம் மாவட்டம் முழுவதும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின் வெற்றிக்கு உதவிய வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், காவல்துறையினர், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நன்றி தெரிவித்துக் கொண்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...